விதைகள்
விதைத்த "விதை"
முளைக்கவில்லை
விதைத்தவன்
சலித்துப்போய்
முடக்கம் கொண்டான்
"விதைகள்"
முடங்கவில்லை
சலிக்கவில்லை
பூமியை பிளந்துக் கொண்டு
புன்னகையோடு முளைத்தது
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
என்ற பழமொழியை
மனிதனுக்கு
நினைவூட்டியது
"விதைகள்".....!!!
--கோவை சுபா