139 இன்ப துன்பம் இருவருக்கும் ஒன்றே - கணவன் மனைவியர் இயல்பு 31

தரவு கொச்சகக் கலிப்பா

அன்பருண்ணில் என்பசிபோம் அவர்களிக்க யான்களிப்பேன்
துன்பமவ ருறில்யானுந் துன்புறுவேன் ஆதலினால்
என்படல்வே றெனினுமெமக் கின்னுயிரொன் றெனவறிந்தேன்
பின்பவர்தாம் என்னைவிட்டுப் பிரிவதெவ்வா றுரைசகியே. 31

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

“தோழியே! என் தலைவர் உணவு உண்டால் என் பசி நீங்கும். அவர் மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன். அவர் துன்பமுற்றால் நானும் துன்பப்படுவேன்.

அதனால் எலும்பாலாகிய என் உடம்பு வேறாக இருந்தாலும், எனது இனிய உயிர் ஒன்றுதான் என்றறிந்தேன். அப்படியிருக்க இதன்பின்னும் என் தலைவராகிய அவர் என்னை விட்டுப் பிரிவது எவ்வாறு என்று சொல்”” என தோழியிடம் தலைவி கணவன் மனைவியாகிய எங்கள் இருவர்க்கும் இன்ப துன்பம் ஒன்றே என்றுரைக்கிறாள்.

அன்பர் - தலைவர், கணவர். களிப்பு - மகிழ்வு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-23, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே