அவள் ஊட்டிய வாயமுது

நேரிசை வெண்பா

தையலால் வாயமுது தந்தாள் உறவினில்
பையநாக வல்லிச்சாற் நையமென்று -- கையில்
தொடாதவளும் யெச்சிலுடன் ஊட்டினள் நாவால்
படாநின் றவன்வரிசை பல்லு


விளக்கம்.: அக்காலத்தில் தம்பதியினர் இரவில் தாம்பூலம்
போடும் வழக்கம் சர்வ சாதாரணம்.

நாகவல்லி எனும் வெற்றிலைத் தாம்பூலம் அணிந்தத் தலைவி
காதலனை சந்தித்த வேளையில் அவனுக்கும் தாம்பூலம் கொடுக்க இயல முடியாது போக .... அந்த சமயத்தில் தான் தரித்த தாபூலத்தை
நசுங்க மென்று அதனுடைய சாறுடன் தலைவி காதலனுக்கு அவனது
பல் வரிசை தன்னை சேதப் படுத்தாத படி அவளுடைய நாவினால்
வாயினுள் ஊட்டி மகிழ்வித்தாளாம்....

எழுதியவர் : பழனி ராஜன் (15-Feb-23, 3:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 218

மேலே