சொன்னால் புரியாது

யாருடா அவன், "சொன்னால் புரியாது"னு அடிக்கடி சத்தமாச் சொல்லிட்டு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் மெதுவா போயிட்டு இருக்கிறான்? யாருடா அவன்?
@@@@@@@
அவன் நம்ம நகரத்திலேயே பெரிய கோடீஸ்வரர் ஒருவரோட பையன். அவன் உயர் கல்வி படிக்கிற போது அவனோட வகுப்புத் தோழி ஒருத்தியைக் காதலிச்சான். அந்த பெண் ரொம்ப அழகானவள். பணக்காரப் பெண். தேர்வு முடிந்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர். கடைசி தேர்வு எழுதிட்டு மகிழ்ச்சியாக அவளோட காரை அவளே ஓட்டிட்டு போனாள். அவள் வீடு அருகே செல்லும் போது ஒரு கன்டெய்னர் லாரி கவிழ்ந்து அந்தப் பெண் ஓட்டி வந்த கார் மீது விழுந்து அந்தக் காரை அப்பளம் போல் நொறுக்கிருச்சு. பாவம் அவள் நசுங்கி செத்துட்டா. இதைக் கேள்விப்பட்ட அவள் காதலன் துடிதுடித்துப் போய் விரைந்து வந்து மீட்பு பணியைப் பார்த்தான். உடல் நசுங்கித் தரையில் அழுந்திக் கிடந்த தன் காதலியைப் பார்த்துக் கதறி அழுது புரண்டான். யாராலும் அவனைத் தேற்ற முடியவில்லை. சுருண்டு விழுந்து மயங்கிட்டான்.
@@@@@
அப்பறம் என்னடா ஆச்சு?
@@@@@@
மருத்துவமனையில சேர்த்தாங்க. ஒரு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினான் மனநிலை பாதிக்கப்பட்டவனாய். பழைய மாதிரியே விலையுயர்ந்த ஆடையை அணிந்து கொள்வான். நல்ல மனநிலையில் உள்ளவன் போல் தெரிவான். ஆனால் அவன் தனது இறக்குமதி செய்யப்பட்ட இரு சக்கர வண்டியில் நகரைச் சுற்றி வருவான். வண்டியைக் கவனமாக ஓட்டறான். ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை "சொன்னால் புரியாது"னு சொல்லி ஒரு நிமிட இடைவெளிக்குப்பின் "காதலித்தால் மறக்காது"னு சொல்லுவான். நகர மக்கள் எல்லாம் "இவ்வளவு வசதியுள்ள அழகான பையனுக்கா இந்த நிலை?"னு வருத்தப்படுவாங்க.
@@@@@@@
பாவம் டா
@@@@@@@
இரண்டு வருசமா
"சொன்னால் புரியாது
காதலித்தால் மறக்காது"
நம் நகரெங்கும் எதிரொலிச்சிட்டே இருக்குது

எழுதியவர் : மலர் (1-Mar-23, 2:23 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : sonnaal puriyaathu
பார்வை : 268

மேலே