கடைசி நாடகம்
கடைசி நாடகம்.
நடனமாடும் நடராஜா
ஒரு நடிகன்,
ஒரு நல்ல நடிகன்.
அவன் போடும் வேஷமோ,
அதே விட பலே பலே!
அப்படி அவன் போட்ட
வேஷமோன்றில்,
அவன் அணிந்திருப்பான்
புலித்தோல் ஒன்று.
இன்னோரு நாடகத்தில்,
இமயவளோடு காட்சி
அளிப்பான்.
வேறு ஒரு நாடகத்தில்
வேறு வேஷம் போட்டே!
உடுக்கு எடுத்து அடித்தே
உலகத்தை எழுப்பி விடுவான்.
கதை நீண்டே போய்,
காலத்தை விழுங்கிவிடும்.
இறுதி நாடகத்தில்,
ஆடுவான் ஒரு ஆட்டம்
அதுவும் அர்த்த ராத்திரியில்,
எரிகின்ற உடல் மீது
அதுவே அவன் நடித்து
நான் பார்த்து மகிழ்ந்த
என் வாழ்வவின்,
கடைசி நாடகம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.