ஏந்திழையின் பளிச்சிடும் பனிக்கூந்தலைத் தழுவித்

கூந்தலைத் தழுவிய குதூகலத்தில்
தோட்டத்து மலர்களைத் தழுவியது தென்றல்
ஏந்திவந்த குளிரெலாம் ஏரிகுளத்தோடு
இல்லை என்மலர்த் தோழிகளே
ஏந்திழையின் பளிச்சிடும் பனிக்கூந்தலைத் தழுவித்
நானெடுத்து வந்தது என்றது தென்றல்
பூந்தோட்டத்து மலரெல்லாம் புன்னகையில்
தலையசைத்து நன்றி நவின்றது தென்றலுக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (8-May-23, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே