வஞ்சிக்கிறாளோ
வஞ்சிக்கிறாளோ ?
வயலில் இறங்கி
உழுது பயிரிட்டு
விவசாயம் பார்த்தவனுக்கு
வாழ்வாதாரம் இதுதானென
புரியாதவளா இந்த
பூமாதேவி
உயிர்களை படைத்து காத்த
பூமாதேவியே
படைத்த உயிர்களை பறிக்க
பேயாட்டம் ஆடி,
பாதகம் செய்து
பதற விட்டதுபோல்
விளை பொருட்கள்
விளைச்சல் அதிகம் கண்டும்,
உரிய விலை கிடைக்காமல்
விவசாயி வீதியில்கொட்டியது
வாழவிடாமல் அவனை,
வஞ்சிக்கிறாளோ பூமாதேவி?