நெருங்கி வரும்
தான் தான் உயர்ந்தவனென்று
தன்னை பெரிது படுத்தி
அடுத்தவர்களை அடக்கி
அடிமையாக்க எண்ணுவது
ஈகோ என்னும் தன்னுணர்வால்,
இது தவறில்லை
ஆனால்,அகங்காரமும்
ஆணவமும் ஒருவரின்
தலையில் அமர்ந்துத்
தாண்டவமாடி—அடுத்தவரின்
மனதை புண்படுத்தினால்
மனித நேயம் சிதையும்
மண்ணில் பிறப்பெடுத்த
மாந்தர்கள் அனைவரையும்
சொந்தங்களாக பாவித்து
ஒற்றுமையோடு வாழ்ந்தால்—நாடு
சீரும், சிறப்பும் பெரும்,
சேம காலம் நெருங்கி வரும்