உருமாறும் உறவுகள்

உழைப்பைத் திருடும்
உற்றவர் உடனிருக்க
உலகமே இருண்டிடும்
இமை மூடாமல்.....

அழைகளியும் ஆழ்மனது,
வருத்தம் தோய்ந்த
வலிபிறக்கும் இதயத்தில்
இறுதியில்....

விழிவழி கசிந்து
வெளியேறும் மனம்
மறைக்க இயலா
மறுகும் மனவேதனை....

ஊணும் உயிரும்
ஒட்டி உறவாடி
உயிர்த் திருக்கும்
நொடியிலேயே.....

கல்லறையில் அமிழ்ந்த
அமைதி கவ்விட
கதறாமல் கதறும்
வலியில் வாடியமனம்....

உருமாறும் உறவுகளில்
உற்றதுணை தேடும்
மடமையில் மனம்
மாசடையும் மக்களே!!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (20-Sep-23, 6:16 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : urumaarum uravukal
பார்வை : 161

மேலே