உழவனுக்கு துணைவன்

உழவனுக்கு துணைவன்
\\\//////////////

அன்னைத் தமிழில்
அம்மாயென்று அழைத்திடும்
ஆசையில் தாயும்
அரவணைக்கும் நாவால்

இலை தழைகளை
இரையாக அசைபோடும்
ஈன்றக் கண்ணுக்கு
ஈயாது பாலினை

உவகையாகத் தாய்ப்பாலில்லா குழந்தைக்குப் பசியாற்றி
ஊரர் அனைவருக்கும்
ஊட்டச்சத்தானப் பால்தரும்

எழுதில் மக்கும்
எரு உரத்தால்
ஏர்த் தொழில்
ஏற்றம் கண்டிடும்

ஐயமின்றி விவசாயி
வாழ்ந்திட உயிரில்
ஒன்றிணைந்த நன்பனாக
தோள் கொடுத்து

ஓங்கி வளர்த்திடும்
வறுமை நீங்கியே
ஔடதமாக கோமியம்
ஒழித்திடும் நோய்க்கிருமிகளை

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Oct-23, 5:09 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 108

புதிய படைப்புகள்

மேலே