அப்பா

அப்பா

கண்ணையா ஒரு கூலி வேலை செய்யும் விவசாய பணி செய்யும் .விவசாயி. அவன் கிராமத்து பண்ணையாருக்கு சொந்தமான நிலங்களை உழுது தினசரி கூலிக்கு வேலை பார்த்து வந்தான். .அந்த கூலியைக் கூட சில சமயங்களில் வாரத்திற்கு ஒரு முறை தான் பண்ணையாரின் கணக்கு கொடுப்பான். சில நேரங்களில் வேலை செய்யும் வேளையில் பண்ணையார் நிலங்களை பார்வையிட வருவார் அப்பொழுது எல்லோரிடமும் அவர் வேலை மற்றும் பல விஷயங்களை கேட்பார். கண்ணையா தனது முறை வரும் பொழுது இதை அவரிடம் தெரிவிப்பான். அன்று இரவே கணக்கு எல்லார் கூலியையும் எடுத்து கொண்டு வந்து பட்டுவாடா செய்வான். பின் இரண்டு மூன்று வாரங்களுக்கு தினமும் கூலி கிடைக்கும். கணக்கு வந்து அவர்களிடம் இனி பண்ணையாரிடம் சொன்னால் தான் மற்ற ஊர்களில் இருந்து ஆட்களை கொண்டு வருவேன் என மிரட்டி விட்டு செல்வான் .அதன் பிறகு மீண்டும் அதே கதை தான்.பண்ணையாரிடம் கூற வழி இல்லாமல் இருக்கும் வேலை மற்றவர்களுக்கு போய் விடக்கூடாதே என்ற பயத்தில் எல்லோரும் வேலை செய்வார்கள். பாக்கியம் கன்னையாவின் மாமன் மகள் அவளுக்கு திருமண வயது வந்து விட்டதை அறிந்து கொண்டு தனது சொந்தத்திலேயே பெண்ணை வைத்து பார்க்கவேண்டும் என்ற முடிவோடு கன்னையாவிற்கு கொடுக்கலாம் என பேசி அவனை வீட்டிற்கு அழைத்து கேட்ட பொழுது அவனும் சம்மதிக்க சிக்கனமான முறையில் கோவிலில் வைத்து தாலி கட்டி அவளை அழைத்து கொண்டு தன வீட்டிற்கு வந்தான். தினக் கூலியின் அவசியம் அதன் பின்னால் தெரிய ஆரம்பித்தது.பாக்கியம் காலையில் வேலைக்கு செல்லும் பொழுது வீட்டிற்கு வேண்டியவற்றை வாங்கி வர சொல்வாள். படிப்பில் நல்ல தேர்ச்சி இருந்ததால் அவள் எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்து கொண்டிருந்தாள். கன்னையாவிற்கு இது புதிது இதுவரை வந்த காசை செலவு செய்வான் கணக்கெல்லாம் கிடையாது.பாக்கியம் தினமும் அவனிடம் கணக்கை கூறி அடுத்த நாள் கொண்டுவரவேண்டிவற்றையும் கூறுவாள்.கையில் காசில்லாமல் இவைகளை வாங்க முடியாது ஆகையால் கணக்கிடம் தினமும் கூலியை பட்டுவாடா செய்ய சொல்வான்.அப்படி நடக்க வில்லை என்றால் நேரே பண்ணையிடம் சென்று எதைப்பற்றி கூறுவான்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன பாக்கியமும் தான் முழுகாமல் இருக்கும் செய்தி அவன் காதில் விழுந்ததும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான். அவர்கள் இருவரும் குழந்தை பிறக்கும் முன்னரே தங்களுக்குள் பேசிக் கொண்டு பிறக்கும் குழந்தையை நன்றாக படிக்க வைத்து அவனை ஒரு பெரிய வேலைக்கு அனுப்பி கிராமத்தையே அவர்களை பெருமையோடு பார்க்க வைக்கவேண்டும் என மனதில் உறுதி கொண்டனர். குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது நல்லவற்றை செய்வதும் நல்லவைகளை கேட்பதும் அதன் மனதில் பதியும் என்று பெரியோர்களும் மருத்துவர்களும் சொல்லுவதை நாம் கேட்டிருக்கிறோம்.அதே போல கன்னையாவின் மகனும் பிறந்தவுடன் படிக்கும் லட்சியத்தோடு வந்ததுபோல கேட்ட்பத்தை திருப்பி சொல்லும் ஆற்றலுடன் இருந்தான்.அவர்களது தாத்தாவின் பெயரான விஸ்வநாதன் என்ற பெயரை அக் குழந்தைக்கு சூட்டி,மிக மகிழ்ச்சியோடு அனபை பொழிந்து வளர்த்தனர்,கிராமத்தில் சிலர் கண்ணையாவின் காதில் படும்படி என்னமோ அதிசிய பிறவியா உன் குழந்தை என்னும் சொல்லும் அளவிற்கு செய்தி வந்தது. இதற்கு நடுவில் கணக்கு உடம்பு முடியாமல் பண்ணையாரின் வேலையை விட வேண்டி வந்தது.பண்ணையார் பாக்கியத்தின் படிப்பறிவை அறிந்து அந்த பொறுப்பை கண்ணையாவிடமும்,பாக்கியத்திடமும் கொடுத்தார்.
இதனால் அவர்களுக்கு நாள் கூலி சிறிது அதிகரிக்க அவர்கள் இது நம்ம விசுவின் நல்லதிஷ்டம் தான் என எல்லோரிடமும் பெருமையாக சொல்லி கொண்டார்கள்.
நாட்கள் உருண்டோடிட விசுவும் வளர்த்தான் பள்ளியில் அவனை சேர்த்தனர் அவன் படிப்பில் சுட்டியாக இருந்தான்.ஆசியர்கள் அவனுக்கு வேண்டிய கல்வி அறிவை புகட்டியதோடு அவன் கல்வி திறமையையும் மெச்சினார்கள்.சொல்வதை புரிந்து உடனே அவன் திரும்ப உரைப்பது அதிசயமாக இருந்தது. பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களும் விசுவின் புத்தி
சாதூரியத்தைக் கண்டு ஆச்சரியமும் அதிசயமும் அடைந்தனர்.
பள்ளியில் படிக்கும் பல மாணவர்களுக்கு விசுவின் அறிவாற்றல் மிக கடுமையான போட்டியாக இருந்தது.பலரும் அவனிடம் நட்பு கொண்டு பாடங்களை அவன் கற்கும் முறையை அறிந்து கொள்ள விரும்பினார்கள்.விசுவும் அவர்களிடம் தான் புதிதாக ஒன்றும் செய்ய வில்லை நீங்கள் படிப்பது போல் தான் படிக்கிறேன்.படிக்கும் பொழுது என் கவனமெல்லாம் அதை விட்டு அகலுவதில்லை அவ்வளவுதான் என்று கூறுவான்.
பள்ளி படிப்பில் தேர்ச்சியடைந்து மேல் படிப்பிற்காக பள்ளியே அவனை வேறு ஊருக்கு செல்ல அனுப்பியது.அரசு உதவியும் பள்ளி நிர்வாகம் கொடுத்த பணமும் படிப்பிற்கு கை கொடுத்தது.
விசுவிற்கு ஒரு சிறிய தொகை பரீச்சைக்கு மட்டும் செலவழிக்க வேண்டியிருந்தது. அதை அவன் தன் பெற்றோரிடம் தெரிவித்திருந்தான். அதை வாங்க வேண்டி அவன் தனது வீட்டிற்கு வருவதாகவும் சொல்லி இருந்தான்.

அப்பா என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விசு.
" வாப்பா பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களும் விசுவின் புத்தி
சாதூரியத்தைக் கண்டு ஆச்சரியமும் அதிசயமும் அடைந்தனர்.
பள்ளியில் படிக்கும் பல மாணவர்களுக்கு விசுவின் அறிவாற்றல் மிக கடுமையான போட்டியாக இருந்தது.பலரும் அவனிடம் நட்பு கொண்டு பாடங்களை அவன் கற்கும் முறையை அறிந்து கொள்ள விரும்பினார்கள்.விசுவும் அவர்களிடம் தான் புதிதாக ஒன்றும் செய்ய வில்லை நீங்கள் படிப்பது போல் தான் படிக்கிறேன்.படிக்கும் பொழுது என் கவனமெல்லாம் அதை விட்டு அகலுவதில்லை அவ்வளவுதான் என்று கூறுவான்.
பள்ளி படிப்பில் தேர்ச்சியடைந்து மேல் படிப்பிற்காக பள்ளியே அவனை வேறு ஊருக்கு செல்ல அனுப்பியது.அரசு உதவியும் பள்ளி நிர்வாகம் கொடுத்த பணமும் படிப்பிற்கு கை கொடுத்தது.
விசுவிற்கு ஒரு சிறிய தொகை பரீச்சைக்கு மட்டும் செலவழிக்க வேண்டியிருந்தது. அதை அவன் தன் பெற்றோரிடம் தெரிவித்திருந்தான். அதை வாங்க வேண்டி அவன் தனது வீட்டிற்கு வருவதாகவும் சொல்லி இருந்தான்.
அப்பா என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விசு.
" வாப்பா விசு,.பிரயாணமெல்லாம் நல்ல இருந்ததா " என்று கேட்டுக் கொண்டே பெட்டியை வாங்கினார் தந்தை.

" நல்லா தான் இருந்துச்சு" என்று சொல்லிக் கொண்டே சமையலறை நோக்கி நகர்ந்து சென்றான் விசு. " வாடா விசு. சீக்கிரம் போயி கை கால் ‌கழுவிட்டு வா. சாப்பிடலாம்" என்று கூறி உணவு பாத்திரங்களை தயார் செய்தாள் பாக்கியம் .

அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த போது மெல்ல தயங்கியபடி பேச்சை‌ ஆரம்பித்தார் விசுவின் அப்பா," ஏப்பா விசு, பரிச்சைக்கு பணம் கட்டணமுன்னு சொன்னியேப்பா. எவ்வளவு வேணும்பா" என்று கேட்டார்.
" 800 ரூவா கட்டணமுன்னு முன்னாடியே சொன்னானே.
சாப்பிடும் போது தான் பையன்கிட்ட இதைக் கேட்கணுமோ ?" என்று கணவனை‌ கடிந்து கொண்டு விசுவிற்கு சாப்பாடு பரிமாறினாள் பாக்கியம்..
"நம்ம சொந்தகாரங்க, ஊருல‌ இருக்கற எல்லா பண்ணையக் காரங்க கிட்டேயும் கேட்டுட்டேன். யாரும் பணம் இல்லைன்னு சொல்லிட்டாங்க" என்று சாதத்தை பிசைந்தவாறே தயங்கி தயங்கி விசுவின் அப்பா சொல்ல அவரை‌ முறைத்துக் கொண்டே‌ இருந்தாள் பாக்கியம்.
"பக்கத்து ஊருலே மணியக்காரர் கிட்ட பணம் கேட்டுருக்கேன்பா. நாளானிக்கு வந்து பாருன்னு சொன்னாருப்பா. கூலிக்காரன் மவனுக்கு எதுக்குடா‌ வெளியூர் காலேஜில படிப்புனு நம்ம ஊருல பாதிப்பேரு கேட்டு திட்டினாங்க".
இதை‌ சொன்ன போது சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அப்பாவின் கண்ணைப் பார்த்தான் விசு" நல்லா படிக்கிற நீ எங்களுக்கு புள்ளையா பொறந்தது நாங்க செஞ்ச பாவம் போல. உன்னை எப்படி படிக்க வைக்க போறோன்னு தெரியலப்பா " என்று வாடிய முகத்துடன் தன் வருத்தத்தை சொல்லி பையைனை பார்த்தார் கண்ணையா. பாக்கியம் கோபத்துடன் " என்னங்க இப்போ பேசாம சாப்பிடப் போறிங்களா இல்லையா?" என்று கடிந்து கொள்ள, அம்மாவைப் பார்த்து " ஏம்மா அப்பாவை திட்டற" என்று கூறி மீண்டும் அப்பாவை பார்த்து புன்னகையுடன் "அப்பா கவலைப்படாதீங்க. நான் பணம் கட்டிவிட்டேன்" என்று கூறிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் விசு.

இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. "என்னடா சொல்லுற?. ஏது உனக்கு அவ்வளவு பணம்?" எனக் கேட்க "சாப்பிடும் போது பேசாதீங்கன்னு அப்பாவைத் திட்டிட்டு என்னை நீ இப்போ கேள்வி கேக்கறையா?" என்று அம்மாவைப் பேச்சால் மடக்கினான் விசு.
ஒன்றும் புரியாதவராய் விசுவின் கையை பிடித்தார் அவன் தந்தை கண்ணையா.
" அப்பா கவலைப்படாதீங்க. நான் உங்க பையன். அந்த பணத்தை நான் திருடவில்லை . கடனும் வாங்கலை " என்று தந்தையிடம் சொல்லிவிட்டு கைகளை தட்டில் கழுவி விட்டு எழுந்தான் விசு........ "
விசு. நீ யாரையும் ஏமாத்த மாட்டே திருட மாட்டேன்னு எங்களுக்கு நல்லா தெரியும்பா. அதனாலதான் என்ன நடந்துருக்குமோ என்று மனசு படபடப்பா இருக்கு" எனத் தந்தை கண்ணையன் வெளிறிய முகத்துடன் சொல்ல, அவரைப் பார்த்து புன்னகைத்தவாறே வீட்டின் பின்புறம் சென்றான் விசு.

சிறிது நேரம் கழித்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பின்புறம் சென்ற பாக்கியம் விசுவை பார்த்து " ஏன்டா விசு, உண்மைய சொல்லுடா!. ஏதுடா உனக்கு 800ரூவா?. உங்கப்பாவும் நானும் மாசம் முழுசும் வேலைக்கு போனாக் கூட அவ்வளவு காசு வராதே. ஏதாவது வேலைக்குப் போறியா?" என்று கேட்க ஏதும் சொல்லாமல் வீட்டினுள் சென்றான் விசு.
எதுவும் புரியாமல் பாக்கியத்திற்கும் அவள் கணவருக்கும் அன்று இரவு முடிந்தது. காலையில் எழுந்த இருவருக்கும் அதிர்ச்சி. ஊருக்கு புறப்பட தயாராக இருந்தான் விசு.
கண்ணையா ஏதும் பேசாமல் இருக்க, "என்னடா நேத்துத் தானே வந்த! அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட" என்று பாக்கியம் கேட்க "காலேஜ் ஹாஸ்டலுக்கு" என்று ஒற்றை வரியில் பதிலளித்தான் விசு.
தந்தை கண்ணையா ஏதும் பேசாமல் வீட்டின் பின்புறம் செல்ல "என்னடா இப்படி ?, இனி நாங்க காசப் பத்தி ஒன்னும் கேட்க மாட்டோம்" என்று கூறினாள் பாக்கியம்.
அலட்டிக்கொள்ளாமல் அமைதியாய் பதில் சொன்னான் விசு.
"அம்மா நேத்துலேந்து நீயும் அப்பாவும் குழப்பத்தோட இருக்கீங்க. நான் எந்த வேலைக்கும் போகலைம்மா. நான் படிச்சுட்டு மட்டும் தான் இருக்கேன். காலேஜ் பக்கத்துல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல அடிப்பட்டவருக்கு ரத்தம்கொடுத்தா பணம் தரேன்னு சொன்னாங்கம்மா. அவருக்கு ரத்தம் கொடுத்தேன். 1000ரூவா‌ கொடுத்தாங்க. அதைவச்சு 800ரூவா பணத்தைக் கட்டிட்டேன். சாமி படத்துக்கு முன்னாடி 200 ரூவா வச்சுருக்கேன். எடுத்துக்கோம்மா" என்று கூறி முடிக்கும் முன்பே அழ ஆரம்பித்தாள் பாக்கியம்.
"ஐயோ கடவுளே. என்பிள்ளை இரத்தத்தை வித்து படிக்கறானே! உனக்கு இரக்கமே இல்லையா? இதுக்கு தான் இவனை இந்த பாவி வயித்துல பொறக்க வச்சியா?" என்று அழுதுகொண்டே புலம்ப, அவளை சமாதனப்படுத்தினான் விசு.
"கூலிக்காரன் மவனுக்கு படிப்பு எதுக்குன்னு எல்லோரும் கேட்குறப்ப, கஷ்டத்தை விட என்பிள்ளை படிப்பு தான் முக்கியமுன்னு அப்பா நினைக்கிறாரு. வாடா நாயே வேலைக்கு என்று சொல்லாம, ரெண்டு பேரும் என்னைப் படிக்க வைக்க ஆசைப்படுகிறீங்க. உங்களுக்கு புள்ளையாப் பொறக்க நான் கொடுத்து வச்சுருக்கனும்.அம்மா நீங்களும் அப்பாவும் எனக்கு கிடைச்ச வரம்" என்று சொல்ல ஒன்றும் புரியாதவளாய் கலங்கியபடியே அவன் முகத்தை பார்த்தாள் பாக்கியம்.
தனது கண்களைத் துடைத்து கொண்டே "இன்னும் ரெண்டு நாளு தங்கிட்டு போடா" என்று பாக்கியம் சொல்ல, "வேலை இருக்குதும்மா" என்று கூறி பெட்டியை தூக்கினான் விசு.
"விசு அப்பா கிட்ட சொல்லிட்டுப் போப்பா" என்று பாக்கியம் சொல்ல, "அப்பாவோட வாடின முகத்தை என்னால் பார்க்க முடியாதும்மா! மணியக்காரர் கிட்ட பணம் வேண்டாம்னு அப்பாவை சொல்லிடச் சொல்லு" என்று கூறிவிட்டு வீட்டின் வெளியே சென்றான் விசு.
பாக்கியம் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றாள் கணவனை அழைக்க. அங்கே கண்ணீருடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டு இருந்தார் கண்ணையா.
தன் கணவன் முதல் முறையாக அழுவதை கண்ட பாக்கியமும் அவரை பார்த்து அழ, "வக்கத்தவனுக்கு வாரிசா பொறந்துட்டமேனு கவலைப் படாம, எம்புள்ள ரத்தத்த வித்து படிக்கறான். இதை பார்த்துகிட்டு கையாலாகாத ஒரு‌ அப்பாவா நான் இன்னும் உசுரோட இருக்கேனேடி பாக்கியம்" என்று சொல்லி அழுத வேலையில், தந்தையின் கஷ்டத்தை நினைத்து பேருந்து நிறுத்தம் நோக்கி கண்ணீருடன் நடந்து கொண்டிருந்தான் விசு.

எழுதியவர் : கே என் ராம் (24-Dec-23, 9:30 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : appa
பார்வை : 73

மேலே