கண்ணில் எழுதுவது காதல் கவிதையோ
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணில் எழுதுவது காதல் கவிதையோ
கண்ணையும் மிஞ்சுமோ புன்னகை யின்கவிதை
வண்ணமிகு வானவில் வானில் குறிப்பெடுத்து
எண்ணமெல்லாம் அந்த எழில்
------ஒருவிகற்ப இன்னிசை வெண்பா மோனைப் பொலிவுடன்
கண்ணிலினில் எழுதுவது காதலெழில் கவிதையையோ
கண்ணிணையும் மிஞ்சிடுமோ புன்னகையின் மென்கவிதை
வண்ணமிகு வானவில்லும் வானத்தில் குறிப்பெடுத்து
எண்ணமெல்லாம் தூவிற்று எழில்மிகுஅக் கவிதைதன்னை
-----கூவிளங்காய் காய் காய் காய் கலி விருத்தம்
கண்ணிலினில் எழுதுவது காதலெழில் கவிதையையோ
கண்ணிணையும் மிஞ்சிடுமோ புன்னகையின் எழில்கவிதை
வண்ணமிகு எழில்வானவில் வானத்தில் குறிப்பெடுத்து
எண்ணமெல்லாம் தூவிற்று எழில்மிகுஅக் கவிதைதன்னை
-----கலித்தளை மிகுந்து தரவு கொச்சகக் கலிப்பா ஆனது
கலித்தளையுடன் வெண்டளையும் வஞ்சித் தளையும் விரவி வந்ததால்
இது பிரிந்திசை துள்ளல் ஓசை உடைய தரவு கொச்சகக் கலிப்பா