குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

பொய் பாராட்டல் (9, 10)

இடம்பெற்றுத் தழால்.

வழிபாடு மறுத்தல்.

இடையூறு கிளத்தல்.

(இ-ள்) தலைவி வெட்கமுற்றுக் கண்ணை மூடிக்கொண்டு நிற்றலினால் எழுந்த துன்பத்தைக் கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

செம்மையிற் பைங்கொடி யீர்புண்ட ரீகத் திறங்கொ(ண்)டுநீர்
வெம்மையிற் செங்கயன் மீனங்கொண் டீரிந்த வீரியம்போ
விம்மையிற் செய்ய வடமே ருவுங்கொள்ளி லிப்புவியோ
ரும்மையத் தஞ்சைக் குலோத்துங்க சோழனென் றோதுவரே! 13

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (1-Jan-24, 6:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கவிதைகள்

மேலே