சான்றோன் எனக்கேட்டத் தாயின்று
நேரிசை வெண்பாக்கள்
ஈன்ற பொழுதின் பெரிதுவப்பள் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாயவள் -- ஆன்றவளும்
இன்றந்தச் சான்றோன் இழுத்துவந்தா ளைக்கண்டு
பன்றியிவன் என்பாள் பதைத்து
படித்துச்சான் றோனாக பள்ளி யனுப்பக்
கடிமணப்பெண் கைத்தலம் பற்றி -- படியில்
தடிமா விரண்டும் மடித்தேங்காய் இன்றி
இடித்துநுழை யும்வீடுள் இன்று
....