எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்
தருணங்கள் ஏதாகிலும்
தயங்காமல் முன்னேறி
தவறுகளை களைந்திடு..!!

விதைத்த விதைகளுக்கு
இடையிலான களைகளை
களைவது எவ்விதம்
முறையோ அவ்விதமே,

தாய்திரு நாட்டினுள்
ஊடுருவும் புல்லுருவி
கூட்டம் களைதலும்
தலையாய கடமைதான்..!!

கடமை தவறுவோன்
நன்மனிதன் ஆயினும்,
கோழைகளை இவ்வுலகு
கொண்டாடுமா....????


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (9-Jan-24, 10:18 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : yenkeyum eppothum
பார்வை : 183

மேலே