குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.
அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;
அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு
முன்னிலை யாக்கல்.
மெய்தொட்டுப் பயிறல்.
பொய் பாராட்டல் (9, 10)
இடம்பெற்றுத் தழால்.
வழிபாடு மறுத்தல்.
இடையூறு கிளத்தல்.
நீடுநினைந் திரங்கல்.
மறுத்தெதிர் கோடல் (15, 16)
வறிது நகைதோன்றல்.
முறுவற் குறிப்புணர்தல்.
முயங்குதல் உறுத்தல்.
(இ-ள்) தலைவி புணர்ச்சிக்குடன்பட்ட அருமையை வற்புறுத்திக் கூறுதல்.
இதுவுமது
கட்டளைக் கலித்துறை
குடநாணுங் கொங்கைக் கரும்புக்கு மேல்விதிக் கோன்வளைத்த
மடநாண வேலி பரீப்புண்ட தான்மலர்க் கோகனகை
யுடனாக வாழுங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
கடநாக மாக வினிநாந் துணிவது காரியமே! 20