குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

பொய் பாராட்டல் (9, 10)

இடம்பெற்றுத் தழால்.

வழிபாடு மறுத்தல்.

இடையூறு கிளத்தல்.

நீடுநினைந் திரங்கல்.

மறுத்தெதிர் கோடல் (15, 16)

வறிது நகைதோன்றல்.

முறுவற் குறிப்புணர்தல்.

முயங்குதல் உறுத்தல்.

(இ-ள்) தலைவி புணர்ச்சிக்குடன்பட்ட அருமையை வற்புறுத்திக் கூறுதல்.

இதுவுமது

கட்டளைக் கலித்துறை

குடநாணுங் கொங்கைக் கரும்புக்கு மேல்விதிக் கோன்வளைத்த
மடநாண வேலி பரீப்புண்ட தான்மலர்க் கோகனகை
யுடனாக வாழுங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
கடநாக மாக வினிநாந் துணிவது காரியமே! 20

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (19-Jan-24, 8:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே