நறுந்தொகை 32

குறள்வெண் செந்துறை

சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே! 32

- அதிவீரராம பாண்டியர்

பொருளுரை:

கீழோர் பெரிய குற்றங்களைச் செய்தாரானால், மேலோர் அக்குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் அரிதேயாம்.

சிறியோர்கள் பெரும் பிழைகளைச் செய்தால் பெரியோர் அவற்றைப் பொறுத்தலும் அருமையாம்.

பெரியோர் பொறுப்பரென்று கருதி அவரிடத்துப் பெரும்பிழை செய்தல் கூடாது என்க!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-24, 11:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே