நறுந்தொகை 32
குறள்வெண் செந்துறை
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே! 32
- அதிவீரராம பாண்டியர்
பொருளுரை:
கீழோர் பெரிய குற்றங்களைச் செய்தாரானால், மேலோர் அக்குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் அரிதேயாம்.
சிறியோர்கள் பெரும் பிழைகளைச் செய்தால் பெரியோர் அவற்றைப் பொறுத்தலும் அருமையாம்.
பெரியோர் பொறுப்பரென்று கருதி அவரிடத்துப் பெரும்பிழை செய்தல் கூடாது என்க!