இறைவன்

கண்ணுக்கு தெரியாமல் இருக்கின்றான் அருவமாய்
கண்ணைப் பறிக்கும் ஒளியாய் இருக்கின்றான் சூரியனாய்
தன்னொளியில் சந்திரனாய் தாய்ப்போல் அணைக்கின்றான்
கோவில்தோறும் சந்நிதியில் தன்னிகரில்லா வடிவழகனாய்
உருவில் காட்சி தருகின்றான் உண்டென்பார் மனதில்
உள்நின்று ஒளிர்கின்றான் என்றும் அம்மையப்பனாய்
இறைவன் இவனே அறிந்திடு மனமே அவன் நாமம் போற்றி
துதித்திடு நமக்கென்றும் அவனே துணை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Feb-24, 9:32 pm)
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே