கண்ணனுக்காக வாடும் ராதை-- காதலில் தனிமை
என்னைவிட்டு எங்கு போனாயோ கண்ணா
உன்னையே என்மனதில் வைத்து தெய்வமாய்ப்
பூஜிக்கும் உந்தனன்பு ராதைனா னிங்கு
உனக்காக காத்திருக்க நீயெங்கு போனாயோ
மாயோனே வந்துவிடு என்னோடு இங்கிருக்க
இல்லையேல் யமுனையில் என்னைநான் மூழ்கியே
மாய்த்துக்கொள் வேன்சத்தியம் இது