குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
பிரியே னென்றல்
பிரிந்து வருகென்றல்.
இடமணித் தென்றல்.
இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.
3 - வன்புறை முற்றிற்று.
நான்காவது – தெளிவு.
ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.
அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;
இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-
செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
பாகனொடு சொல்லல்.
(இ-ள்) தலைவன் றன்னைத் தேடிவந்த தேர்ச்சாரதியிடத்தில் தலைவி செல்லுதலைக் காட்டிக் கூறுதல்.
முன்பார்த்த வச்சமுஞ் சோர்வோ டுயிர்ப்பு முகவெயர்ப்பும்
பின்பார்த்த நோக்குமென் பேரன்பு மாய்ப்பெரு வேந்தரெல்லாந்
தன்பாற் பணியுஞ் சரணான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
மின்பார்த்த வேல்வல வாபார்க்கி லாயொரு மின்செ(ல்)வதே! 31
5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.