நீதிவெண்பா - கடவுள் வாழ்த்து
நீதிவெண்பா [1] தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் ஆன இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:
இருவிகற்ப நேரிசை வெண்பா
மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு!
கடவுள் வாழ்த்துப்பாடலைத் தவிர்த்து இதில் மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.
இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டு