விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000 பாகம் 3

விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000 : பாகம் 3
+++++++++++++++++++++++++++++++++++

புகுந்த வீட்டுச் சனி
பிறந்த வீடான மூணாறு போக
குரு பார்க்க தொடர்ந்தது தடைபட்ட
கல்லூரி படிப்பு..

லக்கனத்தில் 2,8 ராகு கேது வந்து
தடை போட்ட கல்லூரிக் காதலியோ
நடை போட்டு வந்தாள் கல்லூரிக்கு
சான்றிதழ் வாங்கிடவே ..

பார்த்து விட்டு பகிர்ந்து கொண்டேன்
பாதகனின் திருமண வாழ்க்கையை
பரிதாபமாக நின்றவனை கைப்பிடித்து தேர்த்தியவள்
பஸ்யேற்றி விட வரும்படி கூற

கைநழுவிப் போனவளை
கைப்பிடித்து பஸ்யேற்றி விட
அமர்ந்தவள் அமைதியாக சில நொடி சிந்திக்க
அழைத்தாள் பாக்யாயென்று..

கடகடவென்று பஸ்ஸை விட்டு இறங்கியவள்
காரைக்காலுக்கு என்னுடன் வந்து விடேன்
கண்ணீரோடு அவள் அழைக்க..

இன்னொருத்தி கணவன் நான்
இயலாது உண்ணோடு வர.. என்றேன்

இந்நிலையில் உன்னை விட்டுச் செல்ல
இயலவில்லை பாக்யா என்றவள்
கைப்பிடித்து பேருந்துக்குள் இழுத்தாள்

பாதைமாறி தமிழரின் ஒருவனுக்கு ஒருத்தியென்ற
பண்பாட்டை நொறுக்கிவிட இயலாது
என்று மறுக்க..

கட்டியவளான காளி என்ற கவிதா
ஓடுகாளியென்று ..ஓடுகாளியென்று

அன்றே அறிந்திருந்தால்..

நானும்
ஓடியிருப்பேன் என் காதலியுடன்
ஓய்யாரக் கழுகுமலை வள்ளியுடன் முருகனாக
உயர வாழ்ந்திருப்பேன்
ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் உரியவர் இருந்திருந்தால்

சந்திப்பு பேருந்து நிலையத்தில் முடிந்தது
சந்திப்பு..

ஈஸ்வரன் விளையாட்டு தொடரும்..

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (9-Apr-24, 4:44 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

சிறந்த கவிதைகள்

மேலே