பணம் பாசம் பந்தம்

பணம் பாசம் பந்தம்
எனக்கு வயது தொன்னூறு தாண்டி விட்டது.வீட்டில் ஒரு மூலையில் ஒடுங்கிப் போயிருந்த என்னை
இப்போது சீண்டு வாரில்லை. மனதெல்லாம் ரணகளமாகி வலித்தது. யாரிடம் போய் என்னத்தைச்
சொல்ல ? யாராவது நான் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேட்டால் தானே. அவங்க அவங்க
வேலை அவங்களுக்கு. ஆயிரத்தெட்டுக் கவலைகளோட அலைந்து திரியறவங்களுக்கு என்னோட
கஷ்டத்தைக் கேட்கத்தான் எங்கு நேரமுள்ளது அவர்களால் அது முடியுமா அதுக்குப் பரிகாரம்
தேடத்தான் வாய்ப்பு யுண்டா ? எனக்கு மனசு நொறுங்கி
வலித்தது. இதயமே இல்லாமல் போனது போலிருந்தது. எப்படியெல்லாம் இருந்தேன். என் மனம் பல
ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஓடியது .இளமையில் எப்படியெல்லாம் ஓடிஓடிச் சம்பாதிச்சேன்.
பருத்தி வியாபாரி சுப்பிரமணி என கூறினா சுத்துப்பட்டுக் கிராமத்துல சின்னப் பிள்ளையில் இருந்து
பெரியாளுகள் வரைக்கும் தெரியாதவர்களே இல்லை காலையில எழுந்து மோட்டார் வைச்ச
மிதிவண்டியை எடுத்துக்
கிளம்பினா சாயந்தரம் இருட்டுறபோதுதான் வீட்டுக்குப் பருத்தி மூட்டைகளை வண்டியில
ஏத்திக்கொண்டு வருவேன். சில நாட்களிலே பருத்தி கொஞ்சமாத்தான் கிடைக்கும். அப்போது
என்னோட சைக்கிள் பின்னே கட்டி வைத்து கொண்டு வருவேன். இப்படியே மிக சிக்கனமாக
வாழ்ந்து வாயைக்கட்டி
வயிற்றைக்கட்டி என்கிறார் போல் குடும்பம் நடத்தி பணம் சேர்த்து அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கிப்
போட்டேன். நல்ல நிலம். மண்ணும் மிகவும் நன்றாக இருந்ததால் பொன் விளையும் பூமியாக நான்
போட்டதெல்லாம் தழைத்து வளர்ந்தது. என்னோட மனைவி தாமரை ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரி.
அவ பேருக்கு மட்டும் தாமரை இல்லை பாக்கிறதுக்கு ரொம்ப அழகுதான். அவளுடைய கட்டுச்
செட்டாக் குடும்பம் நடத்ததிய தால் தான் என்னால் இப்படி நிலம் வாங்க முடிஞ்சது. எனக்கு ரெண்டு
பிள்ளைகள் மூத்தவன் வேலு. இளையவன் கண்ணன். நானும் என்னோட மனைவியும் கடுமையாக
உழைத்து,நாங்கள் பட்ட பாடு அவர்களுக்கு வேண்டாம் என அவர்களைப் படிக்க
வைத்தோம்.அவர்கள் இருவரும் படிப்பில் மிக கவனம் செலுத்தி நாங்கள் நினைத்ததற்கு மேலாக
படித்தனர்.ஊரில் உள்ள மேல் நிலை பள்ளியில் நன்றாக தேறி பொறியியல் படிப்பிற்கு தேர்தெடுக்க
பட்டு அதில் நல்ல மார்க்குகள் எடுத்து தேர்ச்சி பெற்றனர்.
கல்லூரியில் நடந்த வேலைக்கான தேர்விலும் நன்றாக செய்து ஒரு பெரிய அலுவலகத்தில்
வேளையில் இருவரும் சேர்ந்தனர்.
வர்களுக்கு காய் நிறைய சம்பாதித்து நன்றாக இருக்கும் அவர்களுக்கு எங்கள் சொந்தத்திலேயே பெண்
பார்த்து திருமணமும் செய்து வைத்தோம்.
இருவரும் தனிக்குடுத்தனமாக சென்னைக்கும்,கேரளாவிற்கும் பணிமாற்றம் வாங்கி கொண்டு
சென்றனர்.
வீட்டிற்கு வந்த மருமகள் சில காலம் மிக நன்றாக எங்களிடம் அன்போடு பழகினார்கள். அதற்க்கு பின்
மெல்ல அவர்களது குணம் மாறி எங்களை அலட்சியம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் தலையணை
மந்திரத்தால், மகன்களும் தங்கள் மனம் மாறி எங்களை அலட்சியம் செய்ய ஆரம்பித்தனர்.
நானும் தாமரையும் தனியாக இருந்தோம் என் பருத்தி வியாபாரத்தை நான் தொடர்ந்து செய்து
கொண்டிருந்தேன் அதனால் எங்கள் குடும்பம் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஒரு ஏக்கம்
அவ்வப்போது வரும் மகன்களும் மருமகள்களும் எங்களோடு இருந்தால் நன்றாக இருக்குமே
இப்பொழுது பேசுவது கூட குறைந்து விட்டதே.இதற்காகவா இவ்வளவு பாடு பட்டோம்.எல்லோரும்
மகிழ்வோடு கிராமத்தில் இருக்கலாமே எல்லோரும் ஒன்றாக இருந்தால் மகிழ்ச்சியும் ஆனந்தமும்
இருந்திருக்குமே என்ற எண்ணம் வந்து மனதை துயரடைய செய்யும். .

என் என்பதாம் ஆண்டு நிறைவை கோவிலில் வைத்து ஆண்டவனுக்கு நன்றி கூறி கிராமத்து
மக்களுக்கு உணவு அளித்தோம்.மகனும் மருமகளும் காலை வந்து மாலையில் சென்று விட்டனர். இது
நடந்து சில வாரம்களில் திடீருன்னு என்னோட தாமரைக்கு உடம்பு முடியாமல் போனது.பக்கத்தில்
உள்ள மருத்துவரிடம் அவளை கவனிக்க சொன்னபொழுது அவர் அளித்த செய்தி என்னை புயலாக
தாக்கியது. அவளுக்கு இரத்தத்தில் புற்று நோய் உள்ளதாகவும் அது மிக விரைவாக பரவி
வருவதாகவும் அவர் கூறி அவளை பக்கத்துக்கு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு சொல்லி பின்
அவரே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். என் தாமரை சில நாட்களிலேயே என்னைத்
தவிக்கவிட்டு விட்டு இறைவனடி சேர்த்துவிட்டாள். . பிள்ளைகள் தங்களோட பொண்டாட்டி
குழந்தைகளோட வந்து சீக்கிரமாக் காரியத்தை முடிச்சி விட்டுப் போநார்கள். நான் மட்டும் தனிமரமா
நின்று அழுதேன். ரெண்டு பிள்ளைகளும் என்னை வாங்கப்பான்னு கூட சொல்லாமல் சென்றது
மனதை குத்தியது. . அவர்களுக்கு அவர்களது வேலையும் சுகமும்தான் பெரிசாப்போச்சு. அவனுங்க
என்னைத் தங்களோடஅழைச்சிகிட்டுப் போகாவிட் டாலும் பரவாயில்லை . அதுக்கு அவர்கள்
என்னிடம் சொன்ன காரணம்தான் என் மனசப் போட்டு இன்னமும் ரம்பமா அறுத்துக்கிட்டு இருக்குது.
என்னோட மனசுக்குள்ள முள்ளு குத்தினமாதிரி ஆகிப்போச்சு. நான் மூத்தவன் முகத்தைப் பார்த்து
அழுதேன்.
அவன் என்னோட கண்ணீரைத் துடைத்து விட்டுட்டு, அப்பா எங்கே தன்னோட கிளம்பி
வந்துருவாரோன்னு நினைத்துக் கிட்டு, ‘‘உங்களை எங்ககூட அழைச்சிக்கிட்டுப் போகலாம் தான்.
இருந்தாலும் அந்த டவுனு வாழ்க்கை ஒங்களுக்கு ஒத்து வராதுப்பா. கோவுச்சுக்காதீங்க உ ங்களுக்கு
அந்தக் கிளைமேட் வேற ஒத்துக்காதுப்பா. நான் பணம் அனுப்பறேன். அப்பப்ப வந்து பார்த்து விட்டுப்
போறேன்னு சொல்லிட்டு என்னைய விட்டுட்டுப் போயிட்டான்.நல்லபடியாக சின்னவன் என்னோட
முகத்தையே பார்க்காமல் , ‘‘அப்பா என்னோட நிலைமை தான் உனக்குத் தெரியுமில்லப்பா
மருமகளுக்கு உன்னையும் அம்மாவையும் பிடிக்க வில்லை அடங்காப்பிடாரிப்பா.எப்பப்பாரு குறை
கண்டு பிடித்து உன்னை அல்லல் படுத்துவாள். கோவுச்சிக்காதப்பா. எனக்கு உ ன்னை அழைச்சிட்டுப்
போகலாண்ணு ஆசைதான்… இருந்தாலும் என் பொண்டாட்டிய நெனச்சாத்தான் ரொம்பப் பயமா
இருக்குப்பா… நானும் உனக்குப் பணம் அனுப்பறேன்பா… அப்பப்ப வந்து பார்த்துட்டும்
போறேம்பா…’’ என்று சமாதானம் கூறிவிட்டு நான் கூறுவதைக் கேட்பதற்குக் கூட நேரம் இல்லாமல்
வேகமாக ஊருக்குக்கி ளம்பிவிட்டான். எமகாதகபிள்ளைகள் . அப்பாவை வைத்து ஒரு வேலை
சோறோ கஞ்சியோ ஊத்தத் துப்பில்ல. சாக்காக ஒண்ணுக்குமாகாத காரணங்களைச் சொல்லுறாங்க .
இனி அவர்கள் என்னை வந்து வரும்படியாக் கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் என்று
மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டேன். வீடு வெறிச்சென்றிருந்தது. சிறுகுழந்தை போல் நான் என்
மனைவி போன இடம், அவள் கோலம் போட்ட இடம், அவளும் நானும்
உட்கார்ந்து பேசிச்சிரித்த இடம் என ஒவ்வொரு இடமாகப் போய் அமர்ந்து அழுதேன். ‘‘தாமரை
பார்த்தியா… நாம பெத்த புள்ளகளை … நீ இருந்திருந்தியின்னா இப்படி நடக்குமா? இல்லை
….நடக்கத்தான் விட்டிருப்பியா?.... நான் அவர்களுக்கு பாரமா ஆயிட்டேன். என்னை ஏதோ
தீண்டத்தகாத பொருள் மாதிரி நெனச்சுட்டுக் கைகழுவிட்டுப் போயிட்டானுங்க. . என்ன
அவங்களோட கூட்டிட்டுப் போகாட்டியும் பரவாயில்லம்மா… அவர்கள் சொன்ன காரணத்தத்தான்
என்னால ஜீரணிக்க முடியவில்லை … அவர்களை இந்த நிலைக்கு உருவாக்க நீயும் நானும் எத்தனை
கஷ்டப்பட்டோம்…. எடுக்காத வேஷமெல்லாம் எடுத்தோம்… ஒரு ஒப்புக்காகவாவது அப்பா எங்க
கூட வாங்கப்பான்னு சொல்ல அந்தப் பிள்ளை களுக்கு மனசு வரவில்லையேம்மா… தோளுமேல
தூக்கி வளர்த்த அப்பா நான் … அவர்களுக்கு என்னோட தயவு இப்பத் தேவையில்ல… அதனால
என்னை ஒதுக்கிப்புட்டாங்க பார்த்தியா என குலுங்கி குலுங்கி அழுதார். … அவர்கள் இனி காலில்
விழுந்து கூப்பிட்டாலும் நான் இனி அவர்களோடு போகமாட்டேன்

தாமரை … நாமரெண்டு பேரும் வாழ்ந்த இந்த வீட்டை விட்டுவிட்டு என் காலம் உள்ளவரை
போகமாட்டேன்மா…’’ என்று மனைவியின் புகைப்படத்தைப் பார்த்துக் கூறிக் கொண்டே அழுதேன்.
நேரம் போனதே தெரியவில்லை. எழுபது வயதுஆகியும் இளைஞனைப் போன்றிருந்த நான்
என்னோட தாமரை இறந்தவுடனேயே தொண்ணூறு வயசுக் கெழவனாக மாறிவிட்டேன். என்னோட
மனைவி இருந்த வரையிலும் வராத முதுமை திடீர்னு வந்து என்னை அமுக்கி விட்டது . நான்
பருத்திவியாபாரத்தை விட்டு விட்டன். ஊருக்குள்ளேயே டீத்தண்ணியும், மதியம் சாப்பாடு சாப்பிடவும்
கடைக்குப் போவேனே தவிர மற்றபடி தேவையில்லாம ஊருக்குள்ளே போறது கிடையாது. முன்னே
மாதிரி ஓடியாடி நடமாட முடியவில்லை வயதும் கவலையும் ஒவ்வொருத்தரையும் எப்படியெல்லாம்
ஆக்கி விடுகிறது. . எனக்கு நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிப் போச்சு. மனசுல என்னோட தாமரையைச்
சுமந்துகிட்டே இருந்தேன். என்னோட மனைவி எதிரில் நின்று ‘‘வாங்கன்னு கூப்பிடுற மாதிரி ஒரு
பிரமை…” ‘‘சீக்கிரமா உன்னோட என்னைக் கூட்டிக்கிட்டுப் போய் விடு தாமரை ’’ தினமும்
மனசுக்குள்ளேயே சொல்லிக்கொள்வேன்.
பணம் அனுப்புறன்னு சொல்லிப் போன ரெண்டு மகன்களும் கடிதங்கூடப் போடல. எப்பவாவது
அவர்களின் நினைப்பு பவந்தா டீக்கடையில இருக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு
அவர்களோடுப் பேசுவேன். அப்பக்கூட எனக்கிட்ட அதிகமாப் பேசாம ரெண்டொரு வார்த்தைகளை
மட்டுந்தான் பேசுவார்கள். பாழாப் போன என்னோட மனசுக் கேட்க மாட்டேங்கிற து. மகன்களை
அப்பப்ப நினக்காம இருக்க என்னால முடியல. திடீர்னு ஒரு நாளு என்னோட பிள்ளைகள்
ரெண்டுபேரும் வந்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்மளப் பார்க்கணுமின்னு
இப்பவாவது
இவர்களுக்கு மனசுல ஆசை வந்ததேன்னு நான் நெனச்சுக்கிட்டேன். அந்த நினைப்புல என்னோட
மனது பூரிச்சுப் போச்சு. அந்த சந்தோஷம் ஒரு கணங்கூட நிலைக்கலை. ரெண்டு பேரும் என்பக்கத்துல
உட்கார்ந்து, ‘‘அப்பா நாங்க
ரெண்டுபேரும் வீடு கட்றோம்பா… இருக்குற லோனெல்லாம் போட்டுட்டோம். கொஞ்சம் பணம்
பத்தலைப்பா… நம்ம நிலம் சும்மாதானே கிடக்குது. அதைவித்துட்டு எங்களுக்குப் பணத்தக்
குடுத்தீங்கன்னா ரொம்ப நல்லதா இருக்கும்பா…’’ என்று பெரியவன் பேச்சை ஆரம்பித்தான்.
அடப்பாவிகளா… என்னை நல்லா இருக்கியான்னு கூடக் கேக்க நினைப்பில்லாமல் பணத்துக்காக
எனக்குச் சோறுபோடுகிற அந்த நிலத்தை விற்கச் சொல்றீகளே… இதுதான் நீங்க என்மேல காட்டுற
பாசமா? என்று கேட்க நெனச்சேன். இருந்தாலும் கேட்க மனசு வரல… அத அடக்கிக்கிட்டு அவனுக
சொல்றதைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். அந்த நிலத்தைக் குத்தகைக்குவிட்டு அதுல வர்ற
வருமானத்தை வச்சுத்தான் என்னோட இறுதிக் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன். அது
அவர்களுக்கும் தெரியும். இது இல்லைன்னா நான் பிச்சைதான் எடுக்கணமென்றும் தெரியும்.
தெரிஞ்சுக் கிட்டே கேட்கிறாங்களே… அடப்பாவிகளா
உங்களாலதான் எனக்கு உ தவ முடியல… நான் கஷ்டப்பட்டு வாங்கின நிலம் எனக்கு ஒரு வாய்க்
கஞ்சி ஊத்துகிறது .
அதுலேயும் நீங்க மண்ணள்ளிப் போட வந்துட்டிங்களேடா… பாவி…’’ என்று மனதிற்குள் நினைத்துக்
கொண்டேன். நான் யோசிப்பதைப் பார்த்த இருவரும், ‘‘அப்பா நீ யோசிக்காதேப்பா உனக்கு நாங்க
ரெண்டுபேரும் மாசாமாசம் ஆளுக்கு ஆயிரம் ரூபா அனுப்பறோம். உன்னத் தவிக்க
விட்டுருவோமாப்பா…’’ என்று ஊரு ஆட்களையும் வச்சுப் பலவாறு கூறி என்னைச் சம்மதிக்க வைச்சு,
நிலத்தை விற்றுப் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். நான் மெல்லவும் முடியாம முழுங்கவும்
முடியாம, ‘ மௌனியாக மனதிற்குள் அழுதவாறே அவர்களுக்கு விடை கொடுத்தேன். எனக்கு நிலம்
விற்ற பணத்தில் சல்லிக்காசு கூட அவர்களிருவரும் கொடுக்கவில்லை. பணத்திற்காகப் பாசம் காட்டும்
பிள்ளைகளைப் பார்த்து எனக்குச் சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. பணத்தை வாங்கிக்

கொண்டு போனவர்கள் சில மாதங்கள் மட்டும் ஆளுக்கு ஆயிரம் ஆயிரம் என்று அனுப்பி வைத்தனர்.
பின்னர் இரண்டு மாதத்திற்கு ஒருதரம் என்று அனுப்பினார்கள். … என்னிடம் இப்பொழுது அவர்களின்
தேவைக்கு ஒன்றும் இல்லையே நான் தேவையற்ற பொருளாகி விட்டேன். ‘‘பிள்ளைகளுக்குப்
பெற்றோர் பாரமா? அவர்கள் மனம் ஏன் இப்படிக் குறுகிப்போய் விட்டது. நானும் தாமரையும் இல்லை
என்று கூறாமல் அவர்களை வளர்த்து இந்நிலைக்கு ஆளாக்கி அவர்கள் வாழும் இந்த சொகுசு வழக்கை
நாங்கள் பூத பிச்சை என தெரியவில்லையே.
என் மனம் ஓலமிட்டது பாவிகளா….எல்லாத்தையும் பிடுங்கிக் கொண்டு என்னை இப்படி ஒருவாய்க்
கஞ்சிக்குக் கையேந்த விட்டுட்டிங்களேடா? மனம் சாபம் கொடுக்க நினைத்தது. இருந்தாலும்
பிள்ளைப் பாசத்தால் அடக்கிக் கொண்டு போறானுங்க . அவர்களுக்கு என்ன கஷ்டமோ…பாவம்…
என்று என் பெற்ற மனம் தானகவே சமாதானம் ஆகியது. நான் இப்ப எல்லோருக்கும் ஒரு வேண்டாத
பொருளாகி விட்டேன். இப்ப யாரிடமும் பருத்தி வியாபாரி சுப்புவை தெரியுமான்னு கேட்டா
ஒருத்தருக்கும் தெரியாது... எல்லோரும் என்னை மறந்துட்டாங்க. வீட்டின் மூலையில் ஒடுங்கிப் போய்
உட்கார்ந்திருந்தேன். யாராவது நினைவு வந்து என்னையப் பார்த்து ஏதாவது சாப்பிடக்
கொடுத்தால்தான் உண்டு… என்ன செய்ய… வாசல்ல வந்து குத்தவச்சு உட்கார வைப்பார்கள்,போற
வங்க வரவங்கப்
பார்த்துக்கிட்டே இருப்பேன். யாராவது ஏதாவது வாங்கித் தரமாட்டாகளான்னு. தெரிஞ்ச முகம்
ஏதாவது போனா அவங்களை அழைத்துப் பேசுவேன். தெரிந்தவர் என்றால் வந்து என்னையப் பாத்துப்
பேசிவிட்டு எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். இல்லை என்றால் இல்லை.
நான் பேசுபவர்களிடம் என் பிள்ளைகளை பார்த்து என்னை காண வரச்சொல்லுகிறீர்களா என்று
கேட்பதும் அவர்கள் நிச்சியம் சொல்கிறோம் என்று சொல்வதும் அன்றாட நடப்பாகி விட்டது .
இனியும் எவ்வளவு நாட்கள் இது செல்லுமோ
இரண்டு குழந்தைகளை நன்றாக வளர்த்து பெரியவனாக்கி
நாளை நம்மை காப்பான் என கனவுலகில் நானும் தாமரையும் வாழ்ந்தோம் அக்கனவு கனவாகவே
மாறி எங்களை வருந்த இனியும் எவ்வளவு வைத்து விட்டது.
எங்கோ வானொலியில் அந்த பாட்டு ஒலித்தது
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம்
என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே
அதன் பின் ஒலித்தது
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
இந்த கஷ்டத்திலும் கொடுமையான வாழ்க்கையிலும் என் முகம் சிறிது அமைதியடைந்தது இப்பாடல்
வரிகளை கேட்டவுடன்.

எழுதியவர் : கே என் ராம் (16-Apr-24, 8:59 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 65

மேலே