கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -19

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -19

"வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை தருவதும் காதல்தான்,மிக கொடிய வேதனையைத் தருவதும் அதே காதல்தான் "

காலையில் தோழனாக கெளதம் திரிஷாவின் கைப்பேசிக்கு அழைத்து பேசுவதும்.. அவளது குடும்பத்தாரும் நலம் விசாரித்த படி அவனுடன் பேசுவார்கள்.. நல்ல பையன் என்ற சான்றிதழ் வேறு..

இரவில் மற்றோர் தொலைபேசி எண்ணில் இருந்து திரிஷாவுக்கு காதலனாக அழைத்து பேசி வந்தான்..

வழக்கமாக இரவு 11.00 மணிக்கு கெளதம் போன் செய்தான் திரிஷா பேசிக் கொண்டிருந்தாள்..

வெளியூர் சென்று இரவு 11.30க்கு வந்த திரிஷாவின் அப்பா ,திரிஷா எப்போதோ சாண்ட்விச் கேட்டிருக்க, அது ஞாபகத்தில் வந்ததால் மகளுக்கு ஆசையோடு வாங்கி வந்திருந்தார், சாண்ட்விச்சை அபிராமிடம்  நீட்டியபடி இதை திரிஷாவிடம் கொடுத்து சாப்பிடச் சொல் என்றார்.. அபிராமி அவள் தூங்கிருப்ப பிரிட்ஜில் வைத்திருந்து காலையில் கொடுக்கலாம் என்றாள்..இது பழ ஜுஸ் கிடையாது பிரிட்ஜில் வைத்து கொடுக்க,இது சாண்ட்விச் இதை சூடா சாப்பிட்டால்தான் டேஸ்ட்டா இருக்கும் என்றார் கமல்..

சாண்ட்விச்சை திரிஷாவிடம் கொடுப்பதற்கு அவள் அறைக்கு அருகில் சென்ற போது ஏதோ பேசும் சத்தம் கேட்க ,அறைக் கதவில் காதை பதித்து ஒட்டுக் கேட்டாள் அபிராமி..

இது காதலர்கள் உரையாடும் உரையாடல் என்பதை புரிந்து கொண்ட அபிராமிக்கு எவனை லவ் பன்றாளோ என்று முனுமுனுத்த படி கோபத்துடன் நின்றவள்,ஒரு முடிவுக்கு வந்தாள்.. திரிஷா கொஞ்சம் செக்ஸியான வார்த்தைகள் பேசுவதை கேட்டபடி நின்றிருந்த அபிராமி அதிர்ந்தாள்.

திரிஷா போன் பேசி முடிக்கும் தருவாயில் வழக்கமாக கெளதமுக்கு போன்  வழியாக முத்தமிட்டு கொண்டிருந்தாள், அந்த முத்தங்கள் ஒவ்வொன்றும் கதவின் அருகே நின்றிருந்த அபிராமியின் கன்னத்தில் என்னடி பிள்ளையை வளர்த்து இருக்க என்று சொல்லி யாரோ அடிப்பது போல் உணர்ந்தாள்.

திரிஷா போன் பேசிய பின் அருகில் வைத்து விட்டு பெட்ஷீட்டை போற்றிய உடன் ,மெல்ல கதவை திறந்த உள்ளே சென்ற அபிராமி திரிஷாவின் கைப்பேசியை கைப்பற்றி வெளியே வந்தவள்,

அபிராமி கைப்பேசயின் Recentயில் My Life என்ற பெயரில் பதியப் பட்ட புதிய தொலைபேசி எண்ணுக்கு பேசி இருந்தால் ,அதே எண்ணுக்கு போன் செய்தாள் அபிராமி மறுமுனையில் எடுத்த கெளதம் " இச்சு இச்சுன்னு" , எதிர் முனையில் அபிராமி முகத்தை சுருக்கி சீ சீனு போனை காதிலிருந்து எடுத்தவள் சகித்துக் கொண்டு அமைதியாக போனை காதருகே கொண்டு சென்றாள் மறுமுனையில் கெளதம் ஏன்டி செல்லம் இப்ப தான் பேசினோம் தூங்க வேண்டாமா ..போனை வை நாளைக்கு காலைல போடுறேன் என்று சினுங்கியபடி  போனை கட் செய்தான், அபிராமிக்கு  கெளதம் வாய்ஸ்தான் என்றும் கண்டறிந்தாள், காலையில் நட்பாக பேசுபவன், இரவில் காதலனாக பேசுவதும் அதே கெளதம் என்பதை அறிந்தவள்..

கமலிடம் நடந்ததை விவரமாக கூறினாள் அபிராமி.. கோபத்தின் உச்சிக்கு சென்ற கமலை ஆறுதல் படுத்தி இது பற்றி அவளிடம் காலையில் பேசுவோம் என்றாள்..

காலையில் எழுந்தவள் ரூமில் போனைத் தேடினாள், போன் அங்கு இல்லை ,போன் இருந்த இடத்தில் சாண்ட்விச் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திரிஷா , நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று வெளியே வந்தாள் ..

எதிர்பார்த்து காத்திருந்த கமல் திரிஷா.. என்று செல்லமாக அழைத்தார்..என்னப்பா என்று அருகில் வந்த மகளை தட்டிக் கொடுத்து.. இதுவரை நீ கேட்டதெல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்திருந்தான் இல்லையா? ஆமா அதற்கு இப்ப என்ன? என்றாள் திரிஷா..

இந்த பருவ வயதில் எல்லோருக்கும் வரக் கூடிய உணர்வுதான்.. அந்த உணர்வு நமக்கு சமமான அந்தஸ்து உள்ளவங்க கூட வரனுமுனு இல்லை..ஆனா நம்பிக்கையான ஒழுக்கம் உள்ளவனாக இருக்கனும்...

நீ தேர்ந்தெடுக்கப்பட்ட பையனுக்கு....

....தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (15-Apr-24, 1:08 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 37

மேலே