உள்ளத்தை தாராயோ

உள்ளத்தை தாராயோ

யாழிசையே வாராயோ உள்ளத்தை தாராயோ /
யாமிருக்கப் பயமேன் காதலைச் சொல்வாயே/
துள்ளும் மீனை விழியில் கொண்டவளே /
தூண்டில் பார்வையில் இழுத்திடுவன் வாராயோ/

கமலத்தின் இதழை உதடில் கொண்டவளே/
கதிரவனாகக் காதல் சூடேற்றிடுவன் வாராயோ/
கார்மேகத்தை கூந்தலில் கொண்டவளே - வண்ணமயிலாகக்/
கரகாட்டம் ஆடியே மனதைக் கவர்ந்திடுவன் வாராயோ/

இலை காய்க் கனிகளை இடை கொண்டவளே/
இனிக்கும் கனியை பறிக்க வந்திடுவேன் வாராயோ/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (22-Apr-24, 3:48 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 63

புதிய படைப்புகள்

மேலே