குயில் பாட்டு

குயில் பாட்டு
காற்றில் அசையும்
கிளை ஒன்றில்
இணையாய் உட்கார்ந்திருக்கும்
குயில்கள்

காற்றின் இசைக்கோ
கிளையின் தாலாட்டுக்கோ
மயங்கி மயங்கி
ஒன்று குரல் எடுத்து
பாட தொடங்க
அதை
தொடர்ந்து மற்றொன்றும்
இப்படியே இருவரும்
ராகமிசைக்க
அந்த
நிசப்தமான காட்டுக்குள்
காற்றோடு சேர்ந்து
கூ..கூ..கூ..கூ இசையும்
சங்கீதமாய் ஒலித்தது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Jun-24, 12:16 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kuil paattu
பார்வை : 57

மேலே