எனக்கு பின்னால்…
எனக்கு பின்னால்…?
எனக்கு பின்னால்..!
எனக்கு பின்னால்….!
வாழும் போது
எண்ணி எண்ணி
மாய்ந்து போய்கிறோம்
அந்த வருத்தத்தில்
மறைந்தும் போகிறோம்
நாமும்
காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் கரைந்து
போய்விடுவோம் என்பதையும்
முன்னர் நம்மை
போலவே இந்த
எண்ணங்கள் கொண்டு
வாழ்ந்து மறைந்தவர்களையும்
மறந்து விட்டு..!