வாழ்வு வளமாக அமைந்திட வரம் வேண்டும்

என் வாழ்வு வளமாக அமைந்திட வரம் வேண்டும்
அனைவருக்கும் எல்லாமும் வேண்டும்
என்குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றும்
ஒருவரை ஒருவர் தாங்கவேண்டும்! (தாயே)

என் வாழ்க்கை துணையும் அவருடைய அன்பும்
இவையே எனக்கென்றும் தந்திடும் மகிழ்ச்சி
அதை எனக்கு நீ, வழங்கிடவே நான்
அனுதினமும் உன்நாமம் துதி செய்கிறேன்
அன்புடன் கருணையும் கொண்டு நான் வாழ
என்றென்றும் தாய்போல நீ அருளுவாய்!

என் வாழ்வு வளமாக அமைந்திட வரம் வேண்டும்
அனைவருக்கும் எல்லாமும் வேண்டும்
என்குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றும்
ஒருவரை ஒருவர் தாங்கவேண்டும்

புவி எங்கும் மெய்யான அமைதி நிலவிட
ஒவ்வொரு மனிதனும் அமைதி பெறவேண்டும்
சமுதாயத்தில், சீர்கேடுகள் வன்முறைகள் எல்லாமும்
மறைந்தோடிட!
ஒருலகம் ஓர் மதம் எல்லோரும் ஓர் குலம்
என்கின்ற என் கனவை நனவாக்குவாய்

என் வாழ்வு வளமாக அமைந்திட வரம் வேண்டும்
அனைவருக்கும் எல்லாமும் வேண்டும்
என்குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றும்
ஒருவரை ஒருவர் தாங்கவேண்டும்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Aug-24, 4:12 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 78

மேலே