விநாயகரை வணங்குவோம்

விநாயகரை வணங்குவோம்

தும்பிக்கையான் மேல் நம்பிக்கை வைத்தால்
துதிப்பவை யாவையும் உனக்கு கிட்டும்
ஐங்கரத்தனை அகம் வைத்து தொழுதால்
ஐயம்மெல்லாம் தீர்ந்து அருள் கிடைக்கும்
ஒரு தந்தம்முடையவனை உள்ளத்தில் வேண்டினால்
ஓதிய மந்திரங்கள் முடியும் முன்னே இன்னல் மறையும்
யானை முகத்தனை முன் வைத்து என்றும் வழிபட
யாவும் சுபம் ஆகும் என்பது உணர்ந்தார் கூறிய வாக்கு
மனதில் உறுதியாக அவனை நினைத்து வாழ்வோர்
மங்களம் பெற்று வாழ்வில் இன்புறுவர் உண்மை இது

எழுதியவர் : கே என் ராம் (6-Sep-24, 11:39 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 29

மேலே