ம்ண்சொறு தின்ன அழைப்பு
ஒரு அரசியல் கட்சியின் தலைவரின அழைப்பு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எனது அன்பிற்குரிய போதுக்குழு உறுப்பினர்களே,
நானும் நீங்களும் கடவுளை வேண்டி மண்சோறு தின்று தேர்தலில்
நமது கட்சி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி
பெறுவதைப் போல கனவு கண்டேன். எனது கனவு என்றுமே
நிறைவேறாமல் போனதில்லை.
எனவே நமது கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்
அனைவரும் வருகிற புதன்கிழமையன்று தவறாமல் என்
பண்ணைக்கு வரவும். அங்குள்ள களத்தில் செம்மண் கொட்டிப்
பரப்பட்டிருக்கும். அதன் மீது மிதமான சூடு உள்ள வடிக்கப்பட்ட
பத்து அண்டா சோறு பரப்பட்டு அதன் மீது நாட்டுச் சர்க்கரை
தூவப்பட்டிருக்கும். ஒவ்வொரு உறுப்பினரும் சர்க்கரை, செம்மண்,
, சொறு கலந்த பத்துக் கைப்பிடி எடுத்து பயபக்தியுடன்
உண்ணவேண்டும். இந்தக் கனவு பற்றி நமது கட்சியின் ஆஸ்தான
சோதிடரிடம் கூறினேன். நமது கட்சியின் வெற்றிக்குச் சாதகமான
சூழ்நிலைகள் இருப்பதாகக் கூறினார். அவரும் நம்முடன் கலந்து
மண்சோறு தின்ன ஆர்வம் இருப்பதாகக் கூறினார்.எனவே
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது புதன்கிழமை
காலை எட்டு மணிக்கே எனது பண்ணைக்கு வந்து சேரும்படி
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
மக்கள் தலைவர் தின்றாயர்
பொதுமக்கள் முன்னேற்றக் கட்சி