என்றும் எங்கும் ஏனோ உன் முகம்

என்றும் எங்கும் ஏனோ உன் முகம்
இன்று வரை வந்ததில்லை
என்ன இந்த புது ஜுரம்!
ஏழாம் அறிவும் உன்னை சிந்திக்கிறது
ஏனோ சந்திக்க மறுக்கும்
உன் கண்களை வெறிக்கிறது!

மிக அருகில் வந்து தூரம் என்கிறாய்
மிகத் தொலைவில் இருந்தும் வாசம் தருகிறாய்
கனவுகளுக்குள் விதைகள் தேடி
இரவோடு இரவாக பயிர் செய்து
காதல் மரம் பூக்கிறது
காலையில் எழும்போது

காதல் பேசுமா உன் இதழ்கள்
கடல் தாண்டுமா என் காகிதக் கப்பல்
நடனமிடும் உன் கண்கள் தடுக்கிறது
என்னை அசையவிடமால்
தாளமிடும் உன் கால் கொலுசுகள்
கைது செய்துவிட்டன என்னை...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (29-Nov-11, 5:40 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 205

மேலே