நட்பின் நினைவுகள்.........!

பூவாய் தேனாய் நீராய் என் கண்ணில்
சொல்லாயோ சென்றாயோ ஒரு நொடியில்......!

பார்க்காமல் சேராமல் நான் இருந்தேன்
அதை அனுபவிக்கும் ஒரு பொழுது அழகே....!

புரியாமல் பூரிப்பால் நீ திகைப்பாய்
நான் காட்டும் அன்பு என்று உணர்ந்தே.....!

குரலாலும் பேச்சாலும் நீ வென்றாய்
என்றும் தோல் கொடுக்க நான் வருவேன் நண்பா.....!

வார்த்தைகள் தேடி ஓடி வந்தேன்
காத்திருப்பில் கரைந்து தான் நின்றேன்......!

வேரோடு நான் அடைந்த துன்பம்
இன்று ஒரு அணுவில் தூளாக செய்தாய்
நேற்றோடு நான் கடந்த வாழ்க்கை
இன்று மலர்ந்ததே மருகுதே உன்னால்
என் அருமை நண்பனே.........!

எழுதியவர் : புவனா (17-Dec-11, 11:05 pm)
பார்வை : 1032

மேலே