எப்படி புரிய வைப்பேன்?

என் சுமைகளை இறக்கி வைக்க

எனக்கென இருந்த ஓர் நெஞ்சம் கூட...

என்னை சந்தேகிக்க ஆரம்பித்ததன்

காரணமாய்...

சூட்சுமக்காரரின் பிடியில் அவள்

அடைபட்டிருப்பதாய் உணர்கிறேன்...

வேண்டாமடி பேதையே!

உயிரை உன்னில் வைத்தேன்... நான்...

என் ஆண்மையை சந்தேகித்து என்னை

கொஞ்சம் கொஞ்சமாய் சாகடிப்பதை விட

நீ மௌனம் கலைத்து ஒரு துளி விஷமேனும்

தா!

மறுப்பேதும் சொல்ல மாட்டேன் அபலையான நான்..

நம் காதல் பிரிக்க உன் உறவினரின் யுக்தி

என் புத்திதனை பேதலிக்க வைக்கிறது

எப்படி புரிய வைப்பேன்...

எழுதியவர் : காளிதாசன்... (27-Dec-11, 4:03 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 251

மேலே