en aasai

என் அன்பே !
உன்னை அழகான நிலா என்று சொல்லதான்
ஆசை
ஆனால்
நீ நிலாவும் அல்ல
இரவு வந்தவுடன் மறைவதற்கு !
என் கண்மணியே !
உன்னை என் கண்கள் என்று சொல்லதான் ஆசை
ஆனால்
நீ என் கண்களும் அல்ல
நித்திரை வந்தவுடன் மூடுவதற்கு !
என் ஆருயிரே !
உன்னை என் உயிர் என்று சொல்லத்தான் ஆசை
ஆனால்
நீ என் உயிரும் அல்ல
இறப்பு வந்தவுடன் பிரிவதற்கு!
என் செல்லமே !
உன்னை என் தோழி என்று சொல்லத்தான் எனக்கு மிகவும் ஆசை
ஏனென்றால் அந்த ஒரு உறவிற்கு மட்டும் தான் இவ்வுலகில்
மரணம் இல்லை!!!!!!!!!!!!!!!!!!! !

எழுதியவர் : bhakiyalakshmi.s (28-Aug-10, 12:43 pm)
சேர்த்தது : bhakiyalakshmi.s
பார்வை : 374

மேலே