கவிதைநீ இல்லாமல் என்நெஞ்சில் ஏது

துள்ளிடும் மீனோடும் தூயநல் நீரோடை
கள்வடியும் காதல் கவின்ரோஜா பூந்தோட்டம்
சொல்லெலாம் சொல்லத் துடிக்க கவிதைநீ
இல்லாமல் என்நெஞ்சில் ஏது

--- இரு விகற்ப இன்னிசை வெண்பா

துள்ளிடும் மீனோடும் தூயநல் நீரோடை
கள்வடியும் காதல் கவின்ரோஜா- தெள்ளிய
சொல்லெலாம் சொல்லத் துடிக்க கவிதைநீ
இல்லாமல் என்நெஞ்சில் ஏது

----- இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-24, 8:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 14

மேலே