காதல் முதல் திருமணம் வரை...,
கண்ணில் விழுந்து நெஞ்சில் நுழைந்து
மனதோடு கலவரம் செய்தது காதல்
நீயன்றி நானும் இல்லை, உன் நினைவின்றி
உள்ளத்தில் வேறில்லை என - குரல்
கொடுத்தது காதல்....
கண்களின் தீண்டலில் காதல் கொண்டு
மனதோடு ஒன்றிய காதலை மறக்க
- முடியாமல்
மணமேடையில் இணைந்தது காதல்...
மண்ணோடு போனாலும் மறவாமல் வாழ
உறுதி பூண்டது - காதல்...
மணமான மறு வருடமே கசந்து போனது
பலரது காதல்,,,,