கொக்கரக்கோ சேவல்.....

ஆதவன் எழும் முன்னே எழுந்திடுவேன்
நான் ஆண்டவன் அ௫ளை பெற்றிடுவேன்
விடியலில் ஒசையை எழுப்பிடுவேன்
உன் விழிகளின் தூக்கத்தை கலைத்திடுவேன்

மலர்களுக்கே பொறாமை தான்
என் ௯ந்தலில் உள்ள
மலர்களை பார்த்து

௯ர்வாள் தேவையில்லை
௯ரிய அலகே போதும்
என் எதிரிகளை வெல்ல

ஆடுகளத்தில் நான் செய்யும் யுத்தம்
உலகப்போரையே மிஞ்சிவிடும்
அரசாட்சி செய்யாவிடினும்
மகுடம் சூட்டப்பெற்ற மன்னவன் நானே..!

எழுதியவர் : anisheeba (20-Jan-12, 3:43 pm)
சேர்த்தது : anisheeba
பார்வை : 346

மேலே