அவளும் அவனும்

அந்த நிமிடம் வாழ்கையின் உச்சத்தை அடைந்தது போல் இருந்தது அவனுக்கு.
தயக்கத்துடன் நெருங்கியவள்
தயங்காமல் சொல்லிசென்ற வார்த்தைகளினால் நேர்ந்த பரவசம்...

நேசித்த உறவுகள் தருகின்ற நொடிநேர மகிழ்ச்சியினை வார்த்தையாலும் செயலாலும் மற்றவர்களுக்கு புரியவைப்பது சுலபமில்லை.
புரிந்துகொண்டான் அன்று அவன்...

எதிபாராமல் நேர்ந்த முதன்முறை சந்திப்பு பெண்மையின் இயல்பான நாணத்தையும் தாண்டிய ஏதோ ஒன்று,
இதயத்தை இடமாற்றிவிட்டது.
நேற்றுவரை காதலை நேசித்தவன்,அதற்கு சொந்தமானவளை கொண்டுகொண்டான் இன்று...

சிறுவயதில்,
மழைமீது இவன்கொண்ட காதலோ...
இவன்மீது மழைகொண்ட காதலோ...
அதிகமாகிப்போனதால்,
அடிக்கடி இரவு உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்ட மழைத்துளிகள்,
இருந்தும் ரசித்தான் மழைத்துளியை
இருட்டிலும் தீப ஒளியின் துணைகொண்டு...

அழகான மாளிகை,
அன்புசெலுத்த ஆளிருந்தும்
அரவணைக்க ஆருமில்லை...
பெயருக்கென வீடிருந்தும் விடுதியே வீடானது
அவளுக்கு...

விடியலுக்காக காத்திருந்த இருவருக்கும்,
வெளிச்சம் தந்தது காதல்தீபம்...
கவலைகள் வந்தாலும்
கலங்கவில்லை இருவரும்...
உணர்வுகளின் பரிமாற்றத்தினால்
உள்ளத்திலும் பாரமில்லை...

பழகிய நினைவுகளை சுகமாய் சுமந்து
நெருங்கும் உறவுகளை சிரிப்பினில் தொடர்ந்து
சந்திக்கும் நாட்களை நம்பிக்கையோடு சிந்திக்கும்
நல்ல காதலர்கள்...

இருவருக்கும்,
உறவுகல்பல இருந்தும்
உண்மையான உறவு காதல்தான்
அந்த உண்மையான உறவினில் இன்று
அவளும் அவனும்...@அனித்பாலா

எழுதியவர் : Anithbala (3-Feb-12, 1:01 am)
பார்வை : 769

மேலே