ஒரு பெண்ணினத்தின் நன்றி உரை

விண்வெளியில் நானிருக்கேன்
விஞ்ஞானியா வேலெய பாத்து
ராணுவத்தில் நானிருந்தேன்
ராணியாக நாட்டைக் காத்து
போலிசாவும் இருந்துருக்கேன்
பொறுக்கிகளே தொவச்சிருக்கேன்..
கண்கண்ட அம்மா ஒனக்கு
கண் கலங்க நன்றி சொல்வேன்
கள்ளிப் பாலே நீ கொடுக்கலையே
கருமம் என்றெனைக் கொல்லலியே...
கண் போலே என்னைக் காத்தே..
கண்ணீர் வந்தா தொடச்சி விட்டே
கண் மூடிப் போனவளே - எனைக்
காத்த காவல் தெய்வம் நீயே.. அம்மா...!

எழுதியவர் : (4-Feb-12, 9:08 am)
சேர்த்தது : ரஞ்சிதா
பார்வை : 456

மேலே