பாசமா !
நீர் அடித்து நீர் விலகுமா ? - இது
வாய் மொழி வார்த்தை
உடன் பிறப்புகளின் பாசம் - பல
நேரங்களில் வெறும் வேஷம்
பொது சொத்தாக இருந்தாலும்
மனம் வராது விட்டுக்கொடுக்க
மனதுக்குள் மறைந்துள்ள மாயை - இதன்
வெளிப்பாடு தனக்கு மட்டுமே என்பது
விட்டு கொடுப்பதை விட - இங்கே
விடாபிடிதான் அதிகம் இருக்கும்
பாசம் !
இது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்
வேசமாக இந்த உலகில் ..........
-ஸ்ரீவை.காதர் -