பாசமா !

நீர் அடித்து நீர் விலகுமா ? - இது
வாய் மொழி வார்த்தை

உடன் பிறப்புகளின் பாசம் - பல
நேரங்களில் வெறும் வேஷம்

பொது சொத்தாக இருந்தாலும்
மனம் வராது விட்டுக்கொடுக்க

மனதுக்குள் மறைந்துள்ள மாயை - இதன்
வெளிப்பாடு தனக்கு மட்டுமே என்பது

விட்டு கொடுப்பதை விட - இங்கே
விடாபிடிதான் அதிகம் இருக்கும்

பாசம் !

இது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்
வேசமாக இந்த உலகில் ..........

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை .காதர் (4-Feb-12, 12:51 pm)
பார்வை : 394

மேலே