உன்னைத்தான் பாடவந்தேன் மெட்டு

உன்னைத்தான் பாடவந்தேன்
எந்தன் அன்பு அன்னையம்மா
உன்னைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்
என்ன சொல்லி பாடுவதோ.....
ஒ.......ஒ...........என்ன சொல்லி பாடுவதோ?
மூஉலகை காத்து நிற்கும்
எழில்மேவும் தெய்வம் நீயே.....
மூவர் தேவர் யாவருமே..........
போற்றும் எழில் தெய்வம் நீயே..............
முன்னின்று காத்தருளும்
முழு முதல் தெய்வம் நீயே..............
உன்னைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்
என்ன சொல்லி பாடுவதோ.....
ஒ.......ஒ...........என்ன சொல்லி பாடுவதோ?
பைந்தமிழ்த் தேன் சொல்லெடுத்து
பதமலரைப் போற்றி நின்றேன் ......
பாசம் மிகும் எந்தன் தெய்வம் .........
பாரில் நீயே............... என்றும் அம்மா.....
பரிவுடனே......நாளும் எம்மை........
பண்புடனே காத்தனையே.......
உன்னைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்
என்ன சொல்லி பாடுவதோ.....
ஒ.......ஒ...........என்ன சொல்லி பாடுவதோ?