என்று மாறும் இந்த நிலை...!
நாட்டை ஆளும் கூட்டம் எல்லாம்
திட்டம் போட்டு திருடுது.
நாட்டில் வாழும் மக்கள் கூட்டம்
பட்டினியால் வாடுது.
ஏட்டை படித்து நோட்டைத் தேடி
இளைஞா் கூட்டம் ஓடுது.
எதிரே வரும் இன்பங்கள் எல்லாம்
எட்டி நின்றே ஏங்குது.
ஏனோ இன்னும் சட்டம் மட்டும்
அமைதியாவே தூங்குது.