என் இனியவளுக்கு சமர்ப்பணம்

எங்கோ பிறந்தாய்
எங்கோ வளர்ந்தாய்,
இறைவனின் நாட்டப்படி
என் வாழ்வினில்
இணைந்தாய்.....

என்ன தவம்
செய்தேன் என
எனக்கே புரியவில்லை?

இல்லறத்தை
நல்லறமாக்கும்
என் இனியவளை பெற,
என்ன தவம்
செய்தேன் என
எனக்கே புரியவில்லை?

நற்பண்புகளை
பறைசாற்றும்
குணவதியை பெற
என்ன தவம்
செய்தேன் என
எனக்கே புரியவில்லை?

வாழ்வில் சோதனை
சோதனையில் வாழ்வு
இரண்டையும்
இலகுவாய் ஏற்ற
இனியவளை
இல்லாளாய் அடைய
என்ன தவம்
செய்தேன் என
எனக்கே புரியவில்லை?

பணம் குப்பையிலே
குணம் பந்தியிலே என,
மாற்றியவளை
மனம் முடிக்க
என்ன தவம்
செய்தேன் என
எனக்கே புரியவில்லை?

வாழ்க்கைக்காகவே பணம்
பணத்திற்காக வாழ்வல்ல
என எடுத்தியம்பிய
என்னவளை ஏற்க
என்ன தவம்
செய்தேன் என
எனக்கே புரியவில்லை?

நான் மட்டுமே போதும்
என்ற நம்பிக்கையுடன்
தியாகங்கள் பல செய்த,
திருமகளுக்கு,

நான்
என்ன செய்தேன் என
எண்ணி பார்க்கிறேன்
என்னையே கேட்கிறேன்

உறுதியாக சொல்கிறேன்
உண்மையில்
உனக்காகவே வாழ்கிறேன்
உனக்கென மட்டுமே வாழ்கிறேன்
என
உளமார
உரைக்கிறேன்.

இறைவனுக்கு நன்றி!

எழுதியவர் : சன் சம்சுதீன் (7-Feb-12, 1:34 pm)
பார்வை : 333

மேலே