!!! முத்தம் + முத்தம் = முத்தம் !!!

முத்தங்களை
தந்துவிட்டு
உதடுகளை
விட்டுவிட்டு செல்கிறாயே...
உன்
அண்ணன் பெண்
அஞ்சலி
முத்தம் கேட்பாளே
என்ன செய்வாய்...???

ஒரே ஒரு முத்தம்
தந்துவிட்டு
போய்விட்டாய்
பாவம்
அந்த முத்தம்
துணைக்கு ஆள் இல்லாமல்
தனியே கிடந்து தவிக்கிறது
மறுபடியும் வந்து
அதற்கொரு துணையை
கொடுத்துவிட்டு போ...!!!

ஒரே ஒரு முத்தத்தை
தந்துவிட்டு
போதுமா? என்றாய்
இன்னொன்று கொடு என்றேன்
முடியாது என்றாய்
அப்படி என்றால் இதையும்
நீயே திரும்ப
வாங்கிகொள் என்றேன்
உடனே இன்னொரு
கன்னத்திலும் தந்தாய்...!!!

நமது ஒவ்வொரு சந்திப்பிலும்
உன்னிடம்
கெஞ்சி கூத்தாடி
எப்படியாவது
ஒரு முத்தத்தை உன்னிடமிருந்து
நான் வாங்கிவிடுவது
என் வழக்கம்
ஆனாலும்!
உன் முதல்
முத்தத்தின் இனிப்பு
மற்ற முத்தங்களில்
இல்லை...!!!

ஒரு இனிப்பான முத்தத்தையும்
ஒரு கசப்பான முத்தத்தையும்
கேட்டேன்
நீயும் கொடுத்தாய்
அப்பொழுதுதான்
தெரிந்து கொண்டேன் - உன்
முத்தத்திற்கு
இனிக்க மட்டும்தான் தெரியுமென்று...!!!

உன்னைவிட்டு
நான் பிரியும் பொழுது
நீ தந்த
கடைசி முத்தம்
இன்னும் என் உதடுகளில்
ஒட்டிக்கொண்டு
இருக்கிறது...!!!

நமக்குள்
பரிமாறிக்கொள்ளப்பட்டது
முத்தம் மட்டுமல்ல
உயிரும்தான்...!!!

உன்னிடம் நான்
போராடி பெற்ற
முத்தங்களைவிட
நீயே வலிய
கொடுத்த முத்தங்களில்
இனிப்பு கொஞ்சம்
குறைவுதான் என்றாலும்
அவைகள்தான் அதிக
மென்மையானவை...!!!

சத்தமாய்
நீ கொடுத்த
முத்தத்தைவிட
மௌனமாய்
நீ கொடுத்த
முத்தத்தில்தான்
நூறு மடங்கு
சுவை அதிகம்...!!!

இப்பொழுதெல்லாம்
எந்த
இனிப்பு கடைகளையும்
நான் தேடி போவதில்லை
ஏனென்றால்!
உன் முத்தத்தைவிட
எதுவும்
இனிப்பாய் இல்லை...!!!

எனக்கு ஒன்றும்
குழந்தைக்கு ஒன்றும்
தந்தாய்
குழந்தை சிரித்தது
நான் சிலீர்த்தேன்...!!!

உன் உதடு குவியலின்
வரி வரியான
பள்ளங்களில்தான்
இருக்கிறது
எனக்கான உணவு...!!!

என் நோய்களை
தீர்ப்பதில்
முதலிடம் பிடிக்கும்
முக்கியமான
மருந்தே - உன்
முத்தம்தான்...!!!

ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறு கன்னத்தையும்
காட்டு என்று
இயேசு சொன்னார்!
அப்படித்தான்
உன்னிடமும் காட்டுகிறேன்
முத்தத்திற்கு பதிலாய்
நீ
அறைந்தாளும்கூட
அது
இனிக்கும்...!!!

நான் சோர்ந்து
கிடக்கையிலே
ஒரே ஒரு
முத்தம் போதும்
என்னை சுறு சுறுப்பாக்கி
பம்பரம் போல்
சுழலவிட...!!!

என்னை
குழந்தையாக்கிவிடும்
சக்தி - உன்
முத்தங்களுக்கு
மட்டும்தான் உண்டு...!!!

நீ தந்த
ஒவ்வொரு முத்தங்களும்
நீ உன்
உதடுகளால்
என் மனதில்
பதித்த முத்திரைகள்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (7-Feb-12, 1:45 pm)
பார்வை : 1010

மேலே