தாய்மை

பற்கள் முளைக்கும் வரை பாலூட்டினாள்
பற்களின் வருகைக்குபின் சோறுட்டினாள்
பருவம் வரும் வரை உடல் தேய்த்து குளிப்பாட்டினாள்
பருவம் வந்தபின் முதுகு தேய்த்து குளிப்பாட்டினாள்
படிக்கும் காலங்களில் பக்குவமாய் வழிகள் சொன்னாள்
பட்டம் பெற்றபின் எட்டி நின்று பாராட்டினாள்
படுத்தான் மகன் நோயால் ஒரு நாள் தாயவள்
பக்கமோ பொல்லாத தீயின் திருநாள்!
பாதிக்கு பாதியாய் வந்தாள் மருமகள்
மீதிக்கு மீதியாய் கிடந்தாள் பெற்றவள்
இறைவா இறைவா என்று மகனுக்காக பிரார்த்தனை
இன்னும் தீரவில்லை இளைப்பாறும் வயதிலும்
மூச்சுக்கு மூன்நூறு தரம் மகன் மகன் என்றெண்ணுவாள்
முதியோர் இல்லத்தில் முடங்கிகிடந்தபோதிலும்!!!

எழுதியவர் : சுதாகண்ணன் (21-Feb-12, 7:09 pm)
பார்வை : 311

மேலே