அழுவதற்கு நேரம் இல்லை

கம்பத்தில் கரண்டில்
கால்வைக்க ஷாக் அடித்து
காக்கா செத்துக் கிடக்க
கா கா கா கா வென - ஆயிரம் காகங்கள்
கத்திக் கதறின......

கண் காணா இடம் சென்று
கள் அருந்தி சாலையில்
பேருந்து மோத
பிச்சைக் காரனாய் செத்துக் கிடந்தேன்.

விழி ஈக்கள் மொய்த்தன
விரைந்த வாகனம் சக்தி அடித்தது
குப்புறக் கிடந்த என் பொண முகத்தில்
மனித நேய அழுக்குகள் அப்பி இருந்தது
உயிருள்ள பிணங்கள் நடந்தன
யாருக்கும் அழுவதற்கு நேரம் இல்லை ....

எழுதியவர் : (22-Feb-12, 4:55 pm)
சேர்த்தது : ரஞ்சிதா
பார்வை : 260

மேலே