ரோபோவின் கவலை
மரத்தடியில் கை ரேகை
ஜோசியம் பார்த்தது - சார்ஜ்
மங்கிப் போன ரோபோ
மனிதரோடு பழகாதே என்றேன்
மரமண்டைக்கு புறியலியா என்று
மடாரென கேட்டது ஜோசியக்கார ரோபோ
எப்படிக் கண்டுபிடித்தாய் ?
லஞ்சம் வாங்கி வாங்கி உன்
கைரேகை இப்போது கருப்பாகி விட்டது
கட்ட மண்ணாய் போய்விட்டாய்
கவலைப் பட்டு பயனில்லை ரோபோவே நீ
மனிதனாக மாறி விட்டாய்