புது கவிதை பொங்கல் !


வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா

கள்ளி கட்டு மூலையிலே
கலை கோயில் வைப்போம் வாடியம்மா

பள்ளிகளில் கல்வியினை போல்
படைப்போமே நாடி வாம்மா

சொல்லில் புது பொங்கலையும்
சூடாமணியின் பாலினையும்

கண்ணகியின் காவியத்தை
கணக்காக பாகெடுத்து

நெய்தல் நில கோமகளின்
நிறைவான நெய்யெடுத்து

நேசங்கொண்ட கொண்ட ஏலாதியில்
நேர்த்தியான மணமெடுத்து

வாழ்க்கை நெறி வள்ளுவத்தின்
வயிறார நாம் படைக்க

பங்கெடுக்க மக்களெல்லாம்
பண்ணிசைத்து கூடிவிட்டார்

வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா

ஆழி கொண்ட இலக்கணத்தை
ஆற்றலில் நாம் சென்று

தோணி பிடித்து தொல்காப்பியம்
துணையினால் நாம் வென்றாலும்

சேரில் ஊன்றும் நாற்றினைபோல்
செந்தமிழும் வேர் பிடிக்க

வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா

பக்தி நெஞ்சில் பழுத்த நானூரில்
புறம் கூறி புகழையெல்லாம் போற்றி நிற்போம்

பொறுத்திருந்து அகம் மலர்ந்து
புனைந்த குறுந்தொகையில் காதல் கொண்டு

மரபிருந்து - கவி
மனம் நுழைந்து

புதுக்கவிதையை மழலையென
பொங்கல் வைப்போம்

வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா !

எழுதியவர் : A. Rajthilak (7-Sep-10, 6:59 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 1540

மேலே