சாலையில் நிதானம்..!!
கோபமோ மனக் குழப்பமோ
வருத்தமோ பெரும் இழப்போ
தவறுகின்றனர் சிலர் சாலையில்
இடையில் குறுக்கிடுகின்றனர் பாதையில்
அவர்களிடம் நாமும் சரிசமமாய்
கத்துவதும் கோபப்படுவதும் இன்னுமின்னும்
நிதானமிழக்க செய்துவிடும் சர்ச்சையைக்கூட்டிவிடும்
வேண்டும் வேண்டும் நிதானம் நமக்கு
தன்மையாய் எடுத்துரைப்போம் நம்போன்றோர்தானே
திறிந்திடுவர் தவறுகளை உணர்ந்திடுவர்
நல்ல பண்புகள் நம்மிலிருந்து மலரட்டும்..!!