[155 ] ஏன் இப்படி ?

ஜப்பான் நாட்டுடன் ஒப்பந்தம்..
ஜெனரேட்டர்கள் இறக்குமதி செய்யப்படும்..
அணுவினை சமாதானத்திற்கே பயன்படுத்துவோம்..
அணுமின் உலைகளை அமைக்கப் பிற நாடுகளுடன்
ஒப்பந்தம் கையெழுத்தாகியது..
இவ்வாறான செய்திகள் வந்தபொழுது
எதுமே பேசாத மக்கள்
'இன்று முதல் மின்வெட்டு இரண்டுமணி
நேரங்களாக அதிகரிக்கப்படுகிறது' என்றவுடன்
ஓலமிடுவதேன்?
அரசாங்கம் நமது மின் தேவைகளை
முன்கூட்டியே சரியாகக் கணிக்கவில்லை
தேவையான ஏற்பாடுகளைஸ் செய்யவில்லை என்று..ஏன் இப்படி?
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Mar-12, 6:57 am)
பார்வை : 181

மேலே